கேலோ இந்தியா (‘விளையாடு இந்தியா’) விளையாட்டுப் போட்டிகள் ஜனவரி 19 முதல் 31 வரை தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய நான்கு மாவட்டங்களில் நடைபெற்றன.
போட்டியை நடத்திய தமிழ்நாடு 522 வீரர்களை களம் இறக்கியது. தட களத்தில் மட்டும் 47 பேர் கலந்து கொண்ட னர். கால்பந்து விளையாட்டில் 40, ஹாக்கி 36, நீச்சல், வாள் வீச்சு போட்டி களில் தலா 34 வீரர்கள் பங்கேற்றனர். தடகளம், வாள்வீச்சு, நீச்சல், பளு தூக்குதல், ஜிம்னாஸ்டிக் மற்றும் புதிதாக இடம்பிடித்த ஸ்குவாஷ் ஆகிய போட்டிகளில் அதிகப் பதக்கங்களை குவிப் பார்கள் என்ற எதிர்பார்ப்பும் எகிறியது.
அசத்தல்!
கடந்த ஆண்டில் நடைபெற்ற தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் சுமார் 3.71 லட்சம் பேர் பங்கேற்றனர். இது விளை யாட்டுத் துறையின் ஆர்வத்தை பிரதிபலித்தது.
இந்த நிலையில் கேலோ இந்தியா விளையாட்டில் தமிழ்நாடு வீரர்கள் தட களத்தில் மட்டும் 47 பேர் கலந்து கொண்ட னர். கால்பந்து 40, ஹாக்கி 36, நீச்சல், வாள் வீச்சு போட்டிகளில் தலா 34 வீரர்கள் பங்கேற்றனர். கோ-கோ 30, கைப்பந்து 28, பளு தூக்குதல் 27, கூடைப்பந்து, கபடியில் தலா 24, சைக்கிள் ஓட்டுதல் 22, மல்யுத்தம் 21, குத்துச்சண்டை 20, ஜிம்னாஸ்டிக்ஸ் 17, துப்பாக்கி சுடுதல் 16, ஜூடோ 14, மல்லா கம்ப், களரிப் பயட்டு, யோகாசனம் தலா (12), ஸ்குவாஷ் கட்கா தலா 10, டேபிள் டென்னிஸ், தாங் தா ஆகியவற்றில் தலா 8, டென்னிஸ், பூப்பந்து தலா - 4, வில்வித்தை 4 என்று 26 பிரிவுகளில் கல ந்து கொண்ட தமிழ்நாடு வீரர்கள் தங்க ளது திறமைகளை வெளிப்படுத்தினர்.
ஜொலித்த தங்கங்கள்!
தமிழ்நாட்டின் விளையாட்டுத் துறை வரலாற்றில் 38 தங்கம், 21 வெள்ளி, 39 வெண்கலப் பதக்கம் என 98 பதக்கங் களை வென்று பதக்கப் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்தது இதுவே முதல் முறை.
விளையாட்டுப் போட்டிகள் துவங்கி யது முதலே தமிழ்நாடு வீரர்கள் தங்கப்பதக்கங்களை வென்று மகாரா ஷ்டிரா, ஹரியானா, தில்லியை பின்னு க்குத் தள்ளி முதலிடத்தை பிடித்தனர். கடைசி கட்டத்தில் ஜிம்னாஸ்டிக்ஸ், நீச்சல், குத்துச்சண்டை, மல்யுத்தம் போட்டிகளில் மகாராஷ்டிரா போன்ற மாநில அணிகள் கடும் நெருக்கடி கொடுத்த நிலையிலும் தமிழ்நாடு வீரர்கள் தடகளத்தில் 11 தங்கம், 6 வெள்ளி, 1 வெண்கலம், நீச்சல் விளையாட்டில் 4 தங்கம், 3 வெள்ளி, 7 வெண்கலம், சைக்கிள் ஓட்டுதலில் 5 தங்கம், 1 வெள்ளி, 4 வெண்கலம் என பதக்கங்களை அள்ளினர்.
பெரிதும் எதிர்பார்த்த வாள் வீச்சு போட்டியில் 2 தங்கம் மட்டுமே வென்ற னர். பூப் பந்து, கைப்பந்து தலா ஒரு தங்கத்தை வென்றனர். புதிதாக சேர்க்கப்பட்ட ஸ்குவாஷ் போட்டியில் 3 தங்கம் வென்ற தமிழ்நாடு வீரர்கள், டென்னிஸ் விளையாட்டில் நான்கு, யோகாசனத்தில் 3, கூடைப்பந்து மற்றும் பளு தூக்குதலில் தலா 2 தங்கப் பதக்கங் களை அறுவடை செய்தனர்.
மேலும் ஒரு மணி மகுடம்
விளையாட்டிற்கு பெயர் பெற்ற மாநில மாக முன்பு அறியப்பட்ட மணிப்பூர், பாஜக ஆட்சியால் தூண்டிவிடப்பட்ட வன்முறைச் சம்பவங்களால் ஏற்பட்டு ள்ள மோசமான சூழலால் பயிற்சிக்கு வழியில்லாமல் தவித்த தேசிய மற்றும் சர்வதேச வாள்வீச்சு வீரர்களுக்கு தமிழ் நாடு அடைக்கலம் கொடுத்து அரவணைத்தது.
தேசிய மற்றும் சர்வதேச வாள் வீச்சுப் போட்டிகளில் விளையாடி வரும் 10 வீரர்கள், 5 வீராங்கனைகள், 2 பயிற்சி யாளர்கள் என மணிப்பூரைச் சேர்ந்த மொத்தம் 17 பேர் கொண்ட குழு, 2023 ஆகஸ்ட் 14 முதல் ஒரு மாதகாலம் சென்னையில் தங்கி பயிற்சி பெற்றனர். அவர்களுக்கான அனைத்து ஏற்பாடு களையும் தமிழ்நாடு அரசு செய்து கொடுத்தது. இவர்களில் 2 பேர் கேலோ இந்தியா போட்டியில் பதக்கம் வென்றது கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
கேலோ இந்தியா 2023 போட்டிகளில் தமிழ்நாட்டு வீரர்கள் ஒவ்வொருவரும் அசாத்தியமான திறமை, விடாமுயற்சி, உழைப்பு, கூட்டு முயற்சிகளால் தேசிய அளவிலான பல சாதனைகளையும் முறி யடித்து 98 பதக்கங்களைக் கைப்பற்றி யது. விளையாட்டுத் துறையின் மகு டத்தில் இன்னொரு இறகு மட்டுமல்ல, விளையாட்டில் ஜொலிப்பதற்கு பணம் இல்லாதது ஒரு தடையாக இருக்கக் கூடாது என்ற நோக்கத்தில், சாம்பி யன்ஸ் அறக்கட்டளையை உருவாக்கி இருக்கும் தமிழ்நாடு அரசின் முயற்சிக்கு மேலும் ஒரு மகுடமாகும்.
அள்ளிக் கொடுத்தும் குஜராத் பூஜ்ஜியம்!
ஒன்றிய அரசின் நிதி அதிக அளவில் குஜராத்துக்கு ஒதுக்கப்படுகிறது என்ற புகார்கள் ஒருபுறம் இருக்க, விளை யாட்டுத் துறைக்கு ஒன்றிய பாஜக அரசு பிற மாநிலங்களை விட குஜராத்துக்கு அதிக தொகை ஒதுக்கியுள்ளது. குறிப்பாக ரூ.608 கோடியை வாரி வழங்கியுள்ளது. ஆனால், தமிழ்நாட்டிற்கு கொடுத்தது வெறும் ரூ.66 கோடி தான்.
இந்த நிதி ஒதுக்கிய சில மாதங்களில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனா வில் நடைபெற்றது. இதில் பதக்கம் வென்ற இந்திய வீரர்களில் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஒருவர் கூட கிடையாது. இதை பலரும் விமர்சித்தனர். அடுத்து, கேலோ இந்தியா விளை யாட்டில் குஜராத் மாநிலம் 6 தங்கம் மட்டுமே வென்று 16 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டது. ஆனால் ஒன்றிய பாஜக அரசு கிள்ளிக் கொடுத்தாலும் தமிழ்நாட் டின் வீரர்கள் சாதித்துள்ளார்கள்.